செய்திகள் :

பெரும் கவிக்கோ வா.மு. சேதுராமன் இறப்பு; சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆண்டநாயகபுரம் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமன். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேதுகாப்பியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார். லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்துள்ளார்.

பெரும் கவிக்கோ உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்த வா.மு.சேதுராமன் பெரும் கவிக்கோ, செந்தமிழ் கவிமணி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார். திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் பெயரிலான மூத்த தமிழறிஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் உடல் நலக் குறைவினால் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆண்டநாயகபுரத்திற்கு பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் நேற்று கொண்டு வரப்பட்டது.

பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமன்

அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பரமக்குடி சார் ஆட்சியர் கங்காதேவி, காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஆண்டநாயகபுரம் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் பெரும் கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஹைதராபாத்: உள்ளாடையில் மறைந்து ஏலக்காய் பாக்கெட்டைத் திருடிய இளைஞர்; சிக்கியது எப்படி?

ஹைதராபாத் சனத்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டி-மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் மீண்டும் கடைக்கு வந்து திருடியுள்ளார்.டி-மார்ட் கடையில், ஓர் இளைஞர் ஏலக்காய் பாக்கெட்டுகளை திருட... மேலும் பார்க்க

`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ் தாக்கரே கட்சியினர்

மகாராஷ்டிராவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி படிக்கவேண்டும் என்று ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவினர் கோரி வருகின்றனர். மும்பை மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

ம.பி: ஒரு சுவருக்கு பெயின்ட் அடிக்க 233 வேலையாட்கள்... திகைக்க வைத்த 'அரசுப் பள்ளி' பில்!

மத்தியபிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு பணியின் செலவீன விவரங்கள் பொது மக்களை திகைக்க வைத்துள்ளது. சகண்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயி... மேலும் பார்க்க

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களு... மேலும் பார்க்க