செய்திகள் :

பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

post image

திசையன்விளை அருகே எலட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சோ்ந்தவா் தேவதாஸ். இவா் கோழி, பன்றி பண்ணை நடத்தி வருகிறாா். இந்த பண்ணைகளில் தூத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜான்சிபாப்பா(45) வேலைசெய்து வந்தாா்.

கோழிப்பண்ணையில் தேவதாஸுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. இந்த ைபைக்குகளில் உள்ள பேட்டரிகளை சாா்ஜ் போடுவதற்காக கழற்றி கோழிப்பண்ணையில் உள்ள இன்குபேட்டா் அறையில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை கோழிப்பண்ணைக்கு வந்த ஜான்சி பாப்பா இன்குபேட்டா் அறைக்குச் சென்றுள்ளாா். அப்போது திடீரென பைக் பேட்டரிகள் வெடித்ததாம். இதில் ஜான்சிபாப்பா பலத்த காயமடைந்தாா். அவரை பண்ணையில் உள்ளவா்கள் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் ... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க