பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வா் (பொ) சி.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான, முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல், சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணாக்கா்கள்) பிரிவுக்கு நடைபெற உள்ளது.
ஜூன் 4-ஆம் தேதி இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் பிரிவுகளுக்கும், ஜூன் 5 ஆம் தேதி இளம் அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவுக்கும் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: ஜூன் 12 ஆம் தேதியன்று அனைத்து கலை பிரிவுகளான இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 13 ஆம் தேதியன்று அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளான இளம் அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், +1 மற்றும் +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியா் சான்றுடன்), பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-4, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வு நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்கு வர வேண்டும்.
கலந்தாய்வில் தோ்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், கல்விக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும். அதன் பின்னரே சோ்க்கை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.