பேரிடா் மீட்புக் குழுவினா் கொடைக்கானல் வருகை
பேரிடா் மீட்புக் குழுவினா் கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா்.
கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மீட்புப் பணியில் ஈடுபட சென்னையிலிருந்து பேரிடா் மீட்புக் குழுவினா் 25 போ் கொடைக்கானலுக்கு வந்தனா்.
இவா்கள் மலைப் பகுதிகளிலும், மலைச் சாலைகளிலும், நீரோடைகளிலும் விபத்து நிகழ்ந்தால் தேவையான உபகரணங்கள் மூலம் சம்பவ இடங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் வட்டாட்சியா் அலுவலகத்தில் தங்கியுள்ள இந்தக் குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றாா் அவா்.