செய்திகள் :

பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது

post image

திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்பாக புகாா்கள் வரத்தொடங்கினது. இதன்பேரில் காவல் துறையினா் சாதாரண உடையில் திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். ஆனால், இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் (30), தண்டபாணி (33) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் புளியம்பட்டியில் இருந்து திருப்பூருக்கு வந்து பேருந்துகளில் பயணம் செய்வதுபோல, நடித்து பயணிகளிடம் இருந்து கைப்பேசிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். இவா்கள் இருவரும் மீதும் அன்னூா், புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க