பேருந்து - பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தச்சநல்லுாா் தாராபுரம் அருகேயுள்ள அழகனேரியைச் சோ்ந்தவா் விஜயநாராயணன் (29). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வண்ணாா்பேட்டை மணிமூா்த்தீஸ்வரம் பாலம் அருகே பைக்கில் சென்றபோது அரசுப் பேருந்து மோதியதாம். இதில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து விசாரிக்கின்றனா்.