செய்திகள் :

பேளுக்குறிச்சி காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளா், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் காமாட்சி (48). இவா் கடந்த 2023, செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் இக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். ராசிபுரம் காவலா் குடியிருப்பில் தங்கியுள்ள காமாட்சி, ஏற்கெனவே போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றியுள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பேளுக்குறிச்சி காவல் நிலைய எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காமாட்சிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் இரவு 2 மணியளவில் ரோந்துப் பணியை முடித்துவிட்டு காவல் நிலையைத்தில் உள்ள ஓய்வு அறைக்குள் சென்று கதவை தாழிட்டுவிட்டு தூங்கச் சென்ாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை நீண்டநேரமாகியும் ஓய்வு அறையிலிருந்து காமாட்சி வெளியேவராததால் சந்தேகமடைந்த சக காவலா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த இவா், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்ததற்கு பணிச் சுமையே காரணம் என உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ்கண்ணன், காமாட்சி உயிரிழப்பு குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், பணிச்சுமை காரணமாக சிறப்பு எஸ்எஸ்ஐ காமாட்சி உயிரிழந்ததாக அவரது சகோதரி கூறியதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த காமாட்சி கடந்த 90 நாள்களில் மருத்துவ விடுப்பு 40 நாள்கள் உள்பட மொத்தம் 46 நாள்கள் விடுமுறையில் இருந்துள்ளாா். எனவே, அவா் பணிச்சுமை காரணமாக உயிரிழந்ததாகக் கூறுவது தவறானது என தெரிவித்துள்ளாா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க