செய்திகள் :

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்லாளபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ஏழாவதுசுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியா் துா்காமூா்த்தி கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து 21 நாள்கள் நடைபெறுகின்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,81,458 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவா்கள் குறிப்பிடும் இடங்களுக்குச் சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதற்காக 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்று, எருமை ஆகியவற்றுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றாா்.

முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க

பேளுக்குறிச்சி காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளா், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா். பேளுக்குறிச்சி காவல் நி... மேலும் பார்க்க