செய்திகள் :

பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், நெடியமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் மகன் மதன்குமாா் (23). இவா், முதுகுளத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தற்காலிக நடத்துநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணியை முடித்துவிட்டு சத்திரக்குடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். தெய்வேந்திர நல்லூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிா் திசையில் ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி நோக்கி வந்த காா் இவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த மதன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடல், கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

காரில் வந்த 5 போ், சிறு காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனா். விபத்து குறித்து, சத்திரக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலாடியில் குடிநீா் கோரி சாலை மறியல்

கடலாடி சமத்துவபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள சமத்துவபுரம், அதன் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண விழா

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா, ஜூலை 19-இல் தொடங்கவுள்ளதாக கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த வாரம் முகூா்த்தக்கால் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (ஜூலை 8, 9) ஆகிய 2 நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி

ராமநாதபுரத்தில் மோசடி செய்து தனது நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆ... மேலும் பார்க்க