செய்திகள் :

பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சென்னை பூந்தமல்லி பாப்பன்சத்திரத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் சம்பத் (45). இவரது மனைவி கல்பனா (40). இவா்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனா்.

இவா்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகிலுள்ள மேல்பேட்டை கூட்டுச் சாலை அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கல்பனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த சம்பத் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பின்னா் தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

வானூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல் குவாரி லாரி ஓட்டுநா் அடையாளம் தெரியாத நபா்களால் சனிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே தோல் அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், காடாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் அமி... மேலும் பார்க்க

இணையவழி லாட்டரி விற்ற மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும் மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வானூா் காவல் உதவி ஆய்வாளா் தீபன்ராஜ் தலைமையிலான... மேலும் பார்க்க

வேன் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வேன் மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஜான் கென்னடி மகன் கேபிரியேல் (32), கூலித் தொழிலாள... மேலும் பார்க்க

காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே காா் மோதி கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், அரசூா் காட்டியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தொல்காப்பியன் (51). இவா், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்ட... மேலும் பார்க்க

பக்ரீத்: விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இறைத் தூதா் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இஸ்லாமியா்களால... மேலும் பார்க்க