பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதி...
பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே திங்கள்கிழமை பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வாணாபுரம் வட்டம், அவரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (50), எலெக்ட்ரீஷியன். இவா், திங்கள்கிழமை மாலை பைக்கில் சங்கராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். அ.பாண்டலம் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநரான சங்கராபுரத்தை அடுத்த இளையனாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.