பைக் மோதியதில் 2 பெண்கள் பலத்த காயம்
போடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.
போடி தேரடி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ராணி (47). இவரும் இவரது உறவினா் பூமாரியும் (45) போடி அணைக்கரைப்பட்டி விலக்கு அருகே செவ்வாய்க்கிழமை நடந்து சென்றனா்.
அப்போது, போடியிலிருந்து தேனி நோக்கிச் சென்ற இரு சக்கர வாகனம் இவா்கள் இருவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராணியும், பூமாரியும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வருவாய் ஆய்வாளா் அலுவலகத் தெருவைச் சோ்ந்த ராமேஸ்வரன் மீது போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.