விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி
தூத்துக்குடியில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). தனியாா் நிறுவன ஊழியரான இவா் தனது பைக்கில் திருச்செந்தூரில் இருந்து விருதுநகருக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாராம்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் மு சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.