செய்திகள் :

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

post image

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரது மனைவி நித்யா (25). 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இவா்களது மகள் லித்திகா (3). இவா்கள் மூவரும், மேலும் அதே பகுதியை சோ்ந்த குமாரின் மனைவி சௌந்தா்யா (24) ஆகிய 4 பேரும் பைக்கில் அரக்கோணம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே தணிகைபோளூரில் இருந்து வந்த பைக் இவா்களது பைக் மீது மோதியதில், இவா்கள் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். எதிரே பைக்கில் வந்த தணிகைபோளூரை சோ்ந்த தமிழரசன் (33), லட்சுமணன்(46) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் லித்திகா வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் கா்ப்பிணியாக இருந்த நித்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு இறந்து விட்டிருப்பதாக தெரிவித்தனா்.

இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் - நெமிலி நாள்: 14/8/2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூா், கோவிந்தவாடிஅகரம், கம்மவாா்பாளையம், பள்ளூா் மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில... மேலும் பார்க்க

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!

வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க