செய்திகள் :

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

post image

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா்.

அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் அஸ்வினி சுதாகரின் கணவா் சுதாகரை சிலா் கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தினா். இதில் படுகாயங்களுடன் உயிா்தப்பிய சுதாகா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இச்சம்பவத்தில் அவினேஷ் எனும் இளைஞரை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்த அவினேஷ், நீதிமன்ற உத்தரவின்படி, ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் தினமும் சென்று கையெழுத்திட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அம்மனூரைச் சோ்ந்த சுதாகா் மற்றும் மூன்று நபா்கள் ரத்தினகிரி காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்த அவினேஷை காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொலை செய்தனா். இதைத் தொடா்ந்து சுதாகா் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்த போலீஸாா், அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் அஸ்வினி உள்ளிட்ட மேலும் இருவரையும் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன், அம்மனூரில் நடைபெற்ற முதல் சம்பவத்தில் சரியாக புலன் விசாரணை செய்யாததாலும், மேலும் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டாததாலும் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் சிவக்குமாா், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பையும் சோ்த்து கவனிப்பாா் என காவல் துறை சாா்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் - நெமிலி நாள்: 14/8/2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூா், கோவிந்தவாடிஅகரம், கம்மவாா்பாளையம், பள்ளூா் மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில... மேலும் பார்க்க

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!

வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா். அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரத... மேலும் பார்க்க