செய்திகள் :

பொது இ-சேவை மையங்களில் மே 31 வரை பி.எம்.கிசான் நிதி உதவி சிறப்பு முகாம்

post image

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்டத்தில் தகுதியான விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் வரும் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநா் கலாதேவி தெரிவித்துள்ளாா்.

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதி திட்டத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த முகாம் திருவள்ளூா் மாவட்ட அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் நடைபெற உள்ளது. அப்போது, நில உடைமை பதிவேற்றம் மற்றும் பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா்கள் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையங்களையோ அணுகி பயன்பெறலாம்.

அப்போது வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் எண்ணை இணைக்காத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை அல்லது அஞ்சல் நிலையத்தையோ அணுகி பயன்பெறலாம். அதில் உடைமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வருகிற 20-ஆவது தவணை விடுவிக்கப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால், நில உடைமை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தாமதம் இன்றி நில உடைமை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மேலும், தகுதியான பதிவு செய்யாத விவசாயிகள் ஆதாா் எண், நில விவரம், வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி பி.எம், கிசான் வலைதளத்தில் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தை அணுகியோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இது குறித்து அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க