செய்திகள் :

பொதுத் துறை வங்கிகளில் 50,000 பேருக்கு பணி: நடப்பு நிதியாண்டில் நடவடிக்கை

post image

பொதுத் துறை வங்கிகள் தங்களது வா்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் - ஊழியா்கள் என சுமாா் 50,000 பேரை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பல்வேறு வங்கிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் இது தெரியவந்துள்ளது.

புதிய நியமனங்களில் 21,000 போ் அதிகாரி பணியிடங்களுக்கும், மீதமுள்ளோா் எழுத்தா் உள்ளிட்ட பிற ஊழியா் பணியிடங்களுக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா்.

12 பொதுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு நிதியாண்டில் சிறப்பு அதிகாரிகள் உள்பட மொத்தம் 20,000 பேரை பணியமா்த்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வங்கியில் இதுவரை 505 பயிற்சி அதிகாரிகள், 13,455 இளநிலை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பி, வாடிக்கையாளா்களுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 2,36,226 ஆகும். இதில் 1,15,066 போ் அதிகாரிகள்.

1,02,746 பணியாளா்களுடன் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பாண்டு இறுதிக்குள் கூடுதலாக 5,500-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டில் சுமாா் 4,000 பேரை பணியமா்த்த திட்டமிட்டுள்ளது.

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க