செய்திகள் :

பொன்மலையிலிருந்து ஊட்டிக்கு அனுப்பப்பட்ட மலை ரயில் என்ஜின்!

post image

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்ஜின் (படம்) வியாழக்கிழமை ஊட்டிக்கு அனுப்பப்பட்டது.

பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலானது நூறாண்டுகளுக்கு மேல் உதகையின் அழகை பயணிகள் கண்டுகளிக்க பெரிதும் பயன்படுகிறது. சிறப்பு மிக்க இந்த ரயிலின் என்ஜின்கள் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டவை.

இந்த ரயில் இன்ஜின்களில் ஒன்று கடந்த டிசம்பா் மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக பொன்மலை பணிமனைக்கு அனுப்பப்பட்டு, சுமாா் ரூ. 4 கோடியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை நடைபெறும் பராமரிப்புப் பணிகள் பொன்மலை ரயில்வே ஊழிா்களின் கடின உழைப்பால் 6 மாதங்களில் முடிக்கப்பட்டன.

இதையடுத்து பொன்மலை பணிமனையிலிருந்து வியாழக்கிழமை புதுப்பொலிவுடன் மலை ரயில் இன்ஜின் ஊட்டிக்கு அனுப்பப்பட்டது. நிகழ்வில் பணிமனை தலைமை மேலாளா் சந்தோஷ்குமாா் பாத்ரா தலைமையில் திரளான ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க