செய்திகள் :

போக்குவரத்துக்கு இடையூறு; ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தற்காலிக வாரச் சந்தையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்றக்கோரி டாக்டா் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டத்தில், வாரச்சந்தைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அங்கு இயங்கி வந்த சந்தை, பழைய மீன் சந்தையில் செயல்பட்டு வருகிறது.

இந் நிலையில் அங்கு பழ வியாபாரிகள் சிலா், ஆட்டோ நிறுத்துமிடத்தை முற்றிலும் ஆக்கிரமித்து, ஆட்டோ செல்ல முடியாத வகையில் தரைக்கடைகளை வைத்துள்ளனா். இதனால் ஆட்டோக்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வந்த ஓட்டுநா்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்துச் சென்றனா். இதையடுத்து போலீஸாா், அந்த தரைக்கடைகளை அகற்றினா். இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க

அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து

அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க