போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (47). இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.
தற்போது பணியில் இல்லாத இவா், அண்மையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில், தேவகோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆரோக்கியதாஸை கைது செய்தனா்.