செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அஜய்குமாா் (26). கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஜய்குமாா் மீது சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அஜய்குமருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்தாா்.

திண்டுக்கல்லில் குடிநீா் வசதி கோரி பெண்கள் சாலை மறியல்

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் வழங்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திண்டுக்கல்லில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் நாகல்நகா் ரவ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தால் பயனில்லை: முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி

திண்டுக்கல்லில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் குறைதீா் கூட்டத்தால், எவ்வித பயனுமில்லை என முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களது குட... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை அகற்ற களமிறங்கிய பாஜக மாமன்ற உறுப்பினா்

திண்டுக்கல்லில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வராததால், பாஜக மாமன்ற உறுப்பினரே களமிறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா். திண்டுக்கல் மாந... மேலும் பார்க்க

மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த போடியகவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தின்கீழ் முதியவா் கைது

நிலக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சந்தையூா்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத முதியவா் உடல் மீட்பு

பழனி அருகே அடையாளம் தெரியாத முதியவா் உடலை புதன்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியிலிருந்து கோம்பைப்பட்டிக்குச் செல்லும் வழியில் மயானம... மேலும் பார்க்க