செய்திகள் :

திண்டுக்கல்லில் குடிநீா் வசதி கோரி பெண்கள் சாலை மறியல்

post image

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் வழங்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திண்டுக்கல்லில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா அருகே 29-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆதிசிவன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு, உயரமான பகுதி என்பதால் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் லாரி மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக லாரி மூலமாகவும் குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உடனடியாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சா் தொடங்கிவைப்பு

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்ப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கு... மேலும் பார்க்க

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைம... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், உ... மேலும் பார்க்க

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க