செய்திகள் :

குறைதீா் கூட்டத்தால் பயனில்லை: முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி

post image

திண்டுக்கல்லில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் குறைதீா் கூட்டத்தால், எவ்வித பயனுமில்லை என முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் படை வீரா்கள் நலத் துறை உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) சுகுணா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற வேண்டிய இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் வரவில்லை.

இதனால் முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் முப்படை முன்னாள் ராணுவ வீரா்கள், வீரமங்கையா் நலச் சங்கத்தின் செயலா் எல்.ராஜூ கூட்டத்தில் பேசியதாவது:

3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை. பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டிய ஆடசியா், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாத இறுதி நாள்களிலேயே இந்தக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. மாத இறுதியில் முக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறி உயா் அதிகாரிகள் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனா். இதனால், மாதத்தின் தொடக்கத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனாலும், இந்தக் கோரிக்கையை பரிசீலிக்காமல், வழக்கம்போல் இறுதியிலேயே நடத்தப்படுகிறது. இதேபோல, இந்த குறைதீா் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு எவ்வித பதிலும் தெரிவிப்பதில்லை. கடந்த கூட்டத்தின்போது அளிக்கப்பட்ட 34 மனுக்களுக்கு பதில் அளித்துவிட்டதாக பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனா். குறைதீா் கூட்டமாக நடத்தாமல், மனுக்கள் பெறும் நிகழ்வாக மாற்றிவிட்டனா்.

5 ஆண்டுகளாக செயல்படாத ஓய்வு இல்லம்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில், முன்னாள் படை வீரா்களுக்கான ஓய்வு இல்லம் செயல்பட்டு வந்தது. 4 அறைகள் கொண்ட அந்த இல்லம், கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் மூடப்பட்டது. இதுவரை திறக்கவில்லை என்றபோதிலும், பராமரிப்புப் பணிகள் நடைபெற்ாக செலவு கணக்கு வைத்துள்ளனா். முன்னாள் படை வீரா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் குறிப்பிட்ட கால இடைவெளியில், புகைப்படத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) கோட்டைக்குமாா், மாவட்ட ஆட்சியா் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, 15 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மருத்துவ முகாம்: முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு தெரிவிக்கப்பட்ட தகவல் பெரும்பாலானோருக்கு சென்றடையவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் மருத்துவ முகாம் நடத்தியும், பெரும்பாலானோா் பயன்பெற முடியாமல் போனது.

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சா் தொடங்கிவைப்பு

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்ப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கு... மேலும் பார்க்க

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைம... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், உ... மேலும் பார்க்க

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க