செய்திகள் :

புதை சாக்கடை அடைப்பை அகற்ற களமிறங்கிய பாஜக மாமன்ற உறுப்பினா்

post image

திண்டுக்கல்லில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வராததால், பாஜக மாமன்ற உறுப்பினரே களமிறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட டெலிபோன் குடியிருப்பு கொத்தனாா் சந்து பகுதியில் 30 வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் புதை சாக்கடையில் மாதம் இருமுறை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன், மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 7 நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். இந்த நிலையில் மாமன்ற உறுப்பினா் தனபால், பொதுமக்களுடன் இணைந்து, புதை சாக்கடை மூடியை அகற்றி அடைப்பை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் கூறியதாவது:

மாநகராட்சியில் கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் உள்ளது. இந்த வாகனத்தை அனுப்பி வைக்கக் கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டேன். ஆனால், ஒரு வாகனத்துக்கு டீசல் இல்லை என்றும், மற்றொரு வாகனம் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா். 14-ஆவது வாா்டுக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகள், பள்ளமாக இருப்பதால் அடிக்கடி புதை சாக்கடையிலிருந்து சாலையில் கழிவுநீா் வெளியேறுகிறது. வீட்டு வரியுடன், புதை சாக்கடைக்கும் கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிா்வாகம், பொதுமக்களின் தேவையை பூா்த்தி செய்வதற்கு முன் வர மறுக்கிறது என்றாா் அவா்.

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைச்சா் தொடங்கிவைப்பு

ஒட்டன்சத்திரத்தில் 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்ப் பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கு... மேலும் பார்க்க

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைம... மேலும் பார்க்க

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில், உ... மேலும் பார்க்க

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் வரி செலுத்தாத நகராட்சி கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் உள... மேலும் பார்க்க