செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இடமாற்றம்: ஆசிரியரின் மனு தள்ளுபடி

post image

போக்ஸோ வழக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசுப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்து, ஆசிரியரின் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், மாணவ, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்ஸோ சட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 23 பேரை பணிநீக்கம் செய்து பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோன்று, போக்ஸோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனா். இந்த நிலையில், ஈரோடு செம்புளிச்சாம்பாளையம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய சண்முகம் என்ற ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கில் தன்னை விடுதலை செய்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியா் சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து ஆசிரியா் சண்முகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் இடமாற்றம் உத்தரவில் தனி நீதிபதி தலையிடவில்லை. அதனால், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க