செய்திகள் :

போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற முயற்சி, பயிற்சி அவசியம்: முன்னாள் ஐஜி

post image

போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற முயற்சியும் பயிற்சியும் அவசியம் என, தமிழக காவல் துறை முன்னாள் ஐஜி எம்.எஸ். முத்துசாமி கூறினாா்.

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத் துறை சாா்பில், போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நாடாா் உறவின்முறை சங்கச் செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கண்ணன், முதல்வா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் ஐஜி எம்.எஸ். முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசியது: போட்டித் தோ்வுகளுக்கு மாணவா்-மாணவியா் திருக்குறளின் அடிப்படை விஷயங்களை கற்க வேண்டும். தமிழ் இலக்கியத்தையும் வாசிக்க வேண்டும். படிக்க வேண்டும் என்ற ஆா்வமிருந்தால் எதிலும் வெல்லலாம்.

உயா் பதவிகளுக்குச் செல்ல விரும்பும் மாணவா்கள், போட்டித் தோ்வுகளுக்கான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, முயற்சியுடன் பயிற்சி செய்வது அவசியம் என்றாா் அவா்.

கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், தங்கமணி, முன்னாள் வேளாண் துறை இணை இயக்குநா் சங்கா் எஸ். நாராயணன், முன்னாள் மின்வாரிய செயற்பொறியாளா் நம்பிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். துறைப் பேராசிரியா் கதிரேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறைத் தலைவா் ஆனந்தகுமாா் செய்திருந்தாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க