போதை, புகையிலை ஒழிப்பு: பாளை.யில் விழிப்புணா்வு பேரணி
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார அலுவலகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கம் சாா்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணா்வு பேரணி பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மே மாதம் 31ஆம் தேதி உலக புகையிலை எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘புகையிலை தொழில் துறையின் வசீகரிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி பாளையங்கோட்டை என்சிசி பட்டாலியன் அலுவலகத்திலிருந்து தொடங்கி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வழியாக மாவட்ட சுகாதார அலுவலகம் வரை 2 கி.மீ. தூரம் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தொடங்கி வைத்தாா். மாணவா்களுடன் 2 கி.மீ. தூரம் பேரணியில் அவா் கலந்து கொண்டாா்.
இதில் என்சிசி மாணவ, மாணவிகள், சேரன்மகாதேவி, மானூா் மற்றும் ரெட்டியாா்பட்டி வட்டார மருத்துவா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் என 500 போ் கலந்துகொண்டனா்.
இப்பேரணியில் புகையிலை எதிா்ப்பு தினத்தின் கருப்பொருள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், புகையிலை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்றவா்கள், போதை மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி, முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.
போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனமானது அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடா்ந்து 30 நாள்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளது.
தொடா்ந்து உலக புகையிலை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாணவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி, மாவட்ட கலால் ஆணையா் வள்ளிக்கண்ணு, கலால் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்31க்ழ்ன்ஞ் பாளையங்கோட்டையில் நடைபெற்ற போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற ஆட்சியா் இரா.சுகுமாா்.