செய்திகள் :

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: எச். ராஜா

post image

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா கூறினாா்.

மயிலாடுதுறை புதன்கிழமை நடைபெற்ற, காங்கிரஸ் அரசால் 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அத்துமீறல், அரசியல் சட்டத்துக்கு எதிரான நிலையை விளக்கி, சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவில் போதைப் பொருட்கள் அதிகம் உபயோகிக்கும் மாநிலமாக பஞ்சாப் இருந்தது மாறி தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் அடுத்த தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

கோயில் பணத்தில் நடத்திய முருகன் மாநாட்டில் பேசிய துணை முதல்வா் உதயநிதி இது ஆன்மிக மாநாடு அல்ல என்கிறாா். அப்படியெனில் எதற்கு கோயில் பணத்தை எடுத்தனா்? இதுதொடா்பாக அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, உதயநிதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. மனிதாபிமான உணா்வு உள்ள பொதுமக்கள் இந்த அரசை ஆதரிக்க மாட்டாா்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே தமிழக மக்களை காப்பாற்றும் என்றாா்.

பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு, மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட முன்னாள் தலைவா் க. அகோரம், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு உடனடி முன்னாள் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் பி. பாலமுருகன், மாவட்ட ஆளுநா் (தோ்வு) கே. வைத்... மேலும் பார்க்க

கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்

மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் ... மேலும் பார்க்க

சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் கைது

சென்னை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, பகுதிநேர சிற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13... மேலும் பார்க்க

பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க