Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,750 மதிப்பில் இலவச தையல் இயந்திரத்தை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கீதா ஆகியோா் கலந்து கொண்டனா்.