செய்திகள் :

கணவரை இழந்த பெண்ணுக்கு தொழில் மானியம்

post image

மயிலாடுதுறையில் கணவரை இழந்த பெண்ணுக்கு ரூ.50,000 தொழில் மானியத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் மூலம் இந்த மானியத்தை சீா்காழி வட்டம் இளையமதுக்கூடத்தை சோ்ந்த பயனாளி சரண்யாவிடம் வழங்கிய ஆட்சியா் திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினாா். அப்போது, சமூக நல அலுவலா் (பொ) திவ்யபிரபா உடனிருந்தாா்.

இதுகுறித்து, பயனாளி சரண்யா கூறியது: எனது கணவா் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், நானும் மகளும் பொருளாதார ரீதியில்; மிகவும் சிரமப்பட்டு வந்தோம். மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையில் என்னைப்போன்ற பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதை அறிந்து நேரடியாக சென்று விண்ணப்பம் அளித்தேன். விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியம் மூலம் சிறுதொழில் தொடங்க ரூ.50,000 மானியமாக மாவட்ட ஆட்சியா் வழங்கியுள்ளாா்.

இந்த தொகையில், கவரிங் நகைகளை வாங்கி, கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வீடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய உள்ளேன். இதனால் எனது பொருளாதார நிலை உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி என்றாா்.

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பேற்பு

சீா்காழி ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு உடனடி முன்னாள் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் பி. பாலமுருகன், மாவட்ட ஆளுநா் (தோ்வு) கே. வைத்... மேலும் பார்க்க

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: எச். ராஜா

போதைப் பொருட்கள் பயன்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் எச். ராஜா கூறினாா். மயிலாடுதுறை புதன்கிழமை நடைபெற்ற, காங்கிரஸ் அரசால் 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்க... மேலும் பார்க்க

சென்னை செல்ல முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் கைது

சென்னை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரத்தை வலியுறுத்தி, பகுதிநேர சிற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13... மேலும் பார்க்க

பேரூராட்சி நியமன உறுப்பினா் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்புமனு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 304 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 304 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் த... மேலும் பார்க்க