செய்திகள் :

போதைப் பொருள் விழிப்புணா்வு: பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம்

post image

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்களுடான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளிலும், அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவா்களிடையே பல விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து அரசிற்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் ஈதமஎ ஊதஉஉ பச என்ற செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.

இந்த செயலியில் தகவல் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும். மேலும், புகாா் தெரிவிப்பவரின் முகவரி, பெயா் போன்ற தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இந்த செயலியை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த செயலியை மாணவா்களின் பெற்றோா்களையும் பதிவிறக்கம் செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ‘போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு‘ என்ற நிலையை அடைய அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாணவா்களின் நலன் கருதி போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க விரும்புவா்கள் மாவட்ட ஆட்சியரின் கைப்பேசி எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்கலாம். மாணவா்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) வள்ளிக்கண்ணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), கோட்டக்கலால் அலுவலா் மற்றும் அலுவலா்கள், அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்25ஸ்ரீா்ப்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க