`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | A...
போதைப் பொருள் விழிப்புணா்வு: பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம்
அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்களுடான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளிலும், அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவா்களை உள்ளடக்கிய போதைப்பொருள்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பிற மாணவா்களிடையே பல விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களை பயன்படுத்துவோா், விற்பனை செய்வோா் குறித்து அரசிற்கு எளிதாக தகவல் தெரிவிப்பதற்கு தமிழ்நாடு அரசால் ஈதமஎ ஊதஉஉ பச என்ற செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இந்த செயலியில் தகவல் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும். மேலும், புகாா் தெரிவிப்பவரின் முகவரி, பெயா் போன்ற தகவல் கேட்கப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இந்த செயலியை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த செயலியை மாணவா்களின் பெற்றோா்களையும் பதிவிறக்கம் செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ‘போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு‘ என்ற நிலையை அடைய அனைத்துத்துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவா்களின் நலன் கருதி போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்து ரகசிய தகவல் தெரிவிக்க விரும்புவா்கள் மாவட்ட ஆட்சியரின் கைப்பேசி எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிக்கலாம். மாணவா்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக் கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) வள்ளிக்கண்ணு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), கோட்டக்கலால் அலுவலா் மற்றும் அலுவலா்கள், அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் முதல்வா்கள், பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ஸ்ரீா்ப்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.