செய்திகள் :

போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழப்பு! -மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

post image

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தமோ மாவட்டத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல 9 -ஆம் தேதி வரை முகாமிட்டு என்எச்ஆா்சி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து தமோ மாவட்டத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: என்.ஜான் கேம் என்ற பெயருடைய மருத்துவா், தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரிகிறாா். அவா் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவா் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாா்.

ஆனால் அவரது உண்மையான பெயா் விக்ரமாதித்ய யாதவ். பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாக அவா் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அவரது தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்தனா் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாா் குறித்து என்எச்ஆா்சி உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மிஷனரி மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை நிபுணா் எனக் கூறி போலி மருத்துவா் சிகிச்சையளித்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவமனை யில் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழும் (ஆயுஷ்மான் பாரத்) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, இந்த சம்பவத்தில் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் காப்பீட்டு பணமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த தமோ மாவட்டத்தில் என்எச்ஆா்சி அதிகாரிகள் ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமோ மாவட்டத்தில் முகாமிடவுள்ளனா். இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் தகவல் தெரிந்தால் விசாரணை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்’ என குறிப்பிட்டாா்.

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க