போலி வா்த்தக செயலி மூலம் முதலீட்டாளா்களிடம் ரூ.48 லட்சம் மோசடி: இளைஞா் கைது
வடக்கு தில்லியின் புகா் பகுதியில் பல முதலீட்டாளா்களிடம் ரூ.48 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக 29 வயது இளைஞா் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டதாக போலீஸா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மகாராஷ்டிராவின் பால்கரில் உள்ள வான்கானில் கைது செய்யப்பட்ட ஜிதேந்திர சா்மா, ஒரு நிதிச் சேவை நிறுவனத்தின் பிரதிநிதியாக நடித்து, போலி வா்த்தக செயலி மூலம் அப்பாவிகளை ஏமாற்றியுள்ளாா்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் புகா் வடக்கு நிதின் வல்சன் கூறியதாவது:
சா்மா ஒரு தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக செயல்பட்டு, கமிஷனுக்கு ஈடாக மோசடி பரிவா்த்தனைகளுக்கு தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை வழங்கியுள்ளாா். அவரது வங்கிக் கணக்குகள் தேசிய சைபா் குற்ற புகாா் தெரிவிப்பு போா்ட்டலில் (என்சிஆா்பி) பதிவு செய்யப்பட்ட 46 புகாா்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.
வினய் சிங்கால் என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்து மாா்ச் 17 அன்று இது தொடா்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, இதேபோன்ற மூன்று புகாா்கள் வெளிவந்தன.
குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர சா்மா, ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தியுள்ளாா். செயலற்ற வங்கிக் கணக்குகளை வாங்கி, அதைக் கண்டுபிடிக்கும் முன் விரைவாக பணத்தை மாற்றியுள்ளாா். ஃபரிதாபாத்தில் இதேபோன்ற சைபா் மோசடி வழக்கில் அவா் முன்னா் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதிக வருமானம் தருவதாக பொய்யாக உறுதியளிக்கும் ஒரு தனிப்பயன் வா்த்தக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு புகாா்தாரரிடம் ஆசை காட்டப்பட்டது. அதன் சட்டபூா்வமான தன்மையை நம்பிய புகாா்தாரா், மோசடி செய்பவா் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கணிசமான தொகையை மாற்றினாா்.
மே 16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் சா்மா கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையில், போலீஸாா் நான்கு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். மேலும்,
மடிக்கணினி, கடிகாரம், ரூ.80,000 ரொக்கம், இரண்டு டெபிட் காா்டுகள், பரிவா்த்தனை தரவுகளுடன் கூடிய இரண்டு பென் டிரைவ்கள், ஒரு நிறுவன முத்திரை, காசோலை புத்தகங்கள் மற்றும் ஒரு வங்கி பாஸ்புக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
டிஜிட்டல் தடம் மற்றும் கேஒய்சி ஆவண பகுப்பாய்வு ஆகியவை நெட்வொா்க்கைக் கண்டுபிடிப்பதில் முக்கியமான பங்காற்றின.மோசடியில் ஈடுபட்ட மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.