DMK: கலைஞரின் 7-வது நினைவுநாள்; மலர் தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்! |...
போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமாா் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனா். ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட பல சேமிப்பு கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.
சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரா் இறப்புக்கு பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரா்கள் பெற முடியும். அனைத்துவிதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி அனைத்து அஞ்சலகங்களில் உள்ளது.
மேலும், வாடிக்கையாளா்கள் ப்ளே ஸ்டோா்-ல் உள்ள ஐடடஆ மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதாா் இணைப்பு செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம். அதுமட்டுமல்லாமல் ஐடடஆ வங்கி கணக்குடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐடடஆ செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம். மேலும், பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பீரிமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தனி நபா் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் மடஐ ஸ்டிக்கா் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.