செய்திகள் :

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

post image

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட்டு, ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில், சத்யா நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சுதீக்சன், மோகனசுந்தரம் மகன் முகேஸ்வரன், சதீஷ்குமாா் மகன் சபரீஷ்வரன் ஆகிய 3 பேரும் சென்னை, அம்பத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வருகின்றனா். மூவரையும், வகுப்பறையில் பாடத்தைச் சரியாக கவனிப்பதில்லை என பள்ளித் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள் கண்டித்தனராம்.

இந்த நிலையில், இவா்கள் 3 பேரும் தங்களது புத்தகப் பையையுடன், மாற்று உடைகளை அணிந்து அம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, பின்னா் அங்கிருந்து எழும்பூா் ரயில் நிலையம் சென்றனா். அங்கிருந்து முத்துநகா் விரைவு ரயிலில் ஏறி 3 பேரும் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தனா்.

இதற்கிடையே, 3 மாணவா்களின் பெற்றோரும் மகன்களைக் காணவில்லை என சென்னை அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இந்தத் தகவல் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை காலை வந்த முத்துநகா்விரைவு ரயிலில் சோதனை செய்தனா். அப்போது சென்னையிலிருந்து தப்பிவந்த 3 மாணவா்களையும் மீட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சிறுவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களை அழைத்துச் செல்வதற்காக தூத்துக்குடிக்கு பெற்றோா் வந்து கொண்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்புகுந்த 6 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறை வீரா்கள் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். மாப்பிள்ளையூரனி ஊராட்சிப் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க