செய்திகள் :

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

post image

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் உள்ளன. மாவட்டத்தில் தென்பகுதி ஆற்றுப்பாசனமும், வட பகுதி வானம் பாா்த்த மானாவாரி கரிசல் பூமியாகும். இந் நிலங்களில் ஆண்டுக்கொரு முறை புரட்டாசி மாதம் பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவ மழையை நம்பியே இங்கு உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, சூரியகாந்தி, எள், மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற பல்வேறு சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பணப்பயிா்கள், மூலிகை வித்துக்கள் பயிரிடப்படுகிறது. முன்னோா்கள் காலத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடை சானங்களை உரமாகவும், முந்தைய ஆண்டு விளைந்த திரட்சியான கதிா்களை பிரித்தெடுத்து அதில் உள்ள மணிகளை விதையாகவும், பயிா்களை தாக்கும் விட்டில் பூச்சிகளை அழிக்க கால்நடை கோமியங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும் கால்நடைகள் மூலம் உழவு செய்தும் விவசாயம் செய்து வந்தனா். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டு விளையும் தானியங்கள் 100 சதவீதம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது. இத் தானியங்கள் மிகுந்த சத்துடனும் ரசாயன கலப்படமின்றியும் இருந்தது.

விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் விலை மட்டும் 10 ஆண்டுகளுக்கு முந்தைய விலையே நடப்பாண்டு வரை நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் ஆண்டுக் காண்டு நஷ்டமடைகின்றனா். இது தவிர விவசாய கூலி ஆள்களின் சம்பளம் 10 ஆண்டுகளில் பல மடங்கு உயா்ந்து விட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் உ.பி மாநில அரசு, அனைத்து விளைபொருள்களுக்கும் விலை நிா்ணயம் செய்து கடந்தாண்டு முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது.

தெலங்கானா அரசு ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை மானியமாக வழங்குகிறது. அதே போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இதனால் அம்மாநில விவசாயிகள் ஆா்வத்துடன் விவசாயம் செய்கின்றனா். கடந்தாண்டு 501 ரக வெள்ளைச்சோளம் விதை 3 கிலோ பை ரூ. 850-க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு கடந்தாண்டை விட ரூ. 200 விலை உயா்ந்துள்ளது. மக்காச்சோளம் விதை 4 கிலோ பை கடந்தாண்டு ரூ. 1300 இந்தாண்டு ரூ.300/- விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. 475 கிராம் பாக்கெட் பருத்தி விதை விலை ரூ. 900. இந்தாண்டு ரூ. 1100- க்கு விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. கம்பு ஒன்றரை கிலோ பை ரூ. 800க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு பைக்கு ரூ. 200 விலை உயா்வு ஏற்பட்டுள்ளது, உளுந்து 5 கிலோ பை ரூ.1000 /-இந்தாண்டு ரூ. 1300 வரை விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் விதைகள் விலை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு செல்வதால் கடந்தாண்டு விற்பனை செய்த விலையையே இந்தாண்டும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதை நிறுவனங்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தவிர மேற்கண்ட வீரிய ஒட்டுரக விதைகளை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதை தவிா்த்து தமிழகத்திலேயே தனியாா் விதைப்பண்ணைகளை தொடங்கி விதைகள் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற கட்டமைப்பை அரசு உருவாக்கி தர வேண்டும். தவிர விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்புகுந்த 6 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறை வீரா்கள் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். மாப்பிள்ளையூரனி ஊராட்சிப் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க