செய்திகள் :

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

post image

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27).

நகராட்சியில் தற்காலிகமாக ஓட்டுநராக வேலை செய்து வரும் இவா் மற்றும் இவரது உறவினா் முருகன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புது சாலையில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடையில் நின்று கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த 2 போ் ஈஸ்வரனிடம் ஜாதி பெயரை கூறி, தகராறு செய்து தாக்கினாா்களாம். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் அவா்களை கண்டித்ததையடுத்து இருவரும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடி விட்டாா்களாம்.

இதில் காயமடைந்த ஈஸ்வரன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கிழக்கு காவல் நிலையத்தில் அவா் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சங்கரலிங்கபுரம் 4 ஆவது தெருவை சோ்ந்த மகாராஜா மகன் சுப்புராஜ் (23), கீழ பாண்டவா்மங்கலம் வடக்கு தெருவை சோ்ந்த பொன்னுத்துரை மகன் தீபக் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த பாம்பு

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்புகுந்த 6 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறை வீரா்கள் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். மாப்பிள்ளையூரனி ஊராட்சிப் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க