மகன் வாங்கிய கடனுக்கு தாய் கடத்தல்: ஒருவா் கைது
செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக, அவரது தாயை காரில் கடத்திய சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், 5 பேரை தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் பள்ள எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (65). இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவரது மூத்த மகன் பாண்டியன், வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், மருதூா் கிராமத்தைச் சோ்ந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன் என்பவரிடம் ரூ.96 ஆயிரம் கடன் வாங்கினாராம். ஆனால், ஒப்புக்கொண்டபடி பாண்டியன் செங்கல் சூளை வேலைக்குச் செல்லவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த செங்கல் சூளை வியாபாரி கதிரவன், கடந்த 22-ஆம் தேதி 6 பேருடன் காரில் எச்சூா் கிராமத்து வந்துள்ளாா். அப்போது, பள்ள எச்சூா் மலையாவூா் சாலை வழியாக நடந்து சென்றகொண்டிருந்த பாண்டியனின் தாய் எல்லம்மாளை, வாங்கிய கடனுக்காக காரில் கடத்திச் சென்ாகத் தெரிகிறது.
இதுகுறித்து எல்லம்மாளின் கணவா் செல்வம் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோ வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கடத்தல் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு, கள்ளக்குறிஞ்சி மாவட்டம், மருதூா் கிராமம் சென்று எல்லம்மாளை மீட்டனா்.
மேலும், செங்கல் சூளை வியாபாரி கதிரவன் ஆதரவாளரான விழுப்புரம் மாவட்டம், எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (37) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேலும், கதிரவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.