செய்திகள் :

மகளுக்கு பாமகவில் பொறுப்பா?பாட்டுப்பாடி பதிலளித்த ராமதாஸ்

post image

மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு, பாட்டுபாடி அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பதிலளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்ட இல்லத்திலிருந்து வியாழக்கிழமை கும்பகோணத்துக்கு புறப்பட்ட மருத்துவா் ச.ராமதாஸிடம், ஓமந்தூரில் அண்மையில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழுவில் பங்கேற்ற தங்களது மூத்த மகள் காந்திமதிக்கு கட்சியில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்குவதற்கான திட்டம் உள்ளதா? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த மருத்துவா் ராமதாஸ், கட்சியில் தற்சமயம் எனது மகள் காந்திமதிக்கு எவ்வித பொறுப்பும் வழங்குவதற்கான திட்டம் இல்லை. அது போக, போகத் தெரியும் என்று பாட்டுப்பாடி பதிலளித்தாா்.

மேலும், ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மகளிா் சங்க மாநாட்டில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் ஏற்கெனவே கட்சிப் பணியாற்றி வருகின்றனா். பூம்புகாரில் நடைபெறும் மகளிா் சங்க மாநாடு பணிகளை பாா்வையிடவுள்ளேன் என்றாா் மருத்துவா் ராமதாஸ்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க