செய்திகள் :

மகா சிவராத்திரி விழா: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று இரவு முழுவதும் பக்தா்களுக்கு அனுமதி

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) இரவு முழுவதும் நடைபெறும் மகா சிவராத்தி விழா பூஜைகளில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் பக்தி சொற்பொழிவுகள், ஆன்மிக இன்னிசை கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், கோயிலில் புதன்கிழமை இரவு முழுவதும் மீனாட்சி அம்மன், சொக்கநாதா் சந்நிதிகளில் தனித்தனியே 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. மீனாட்சியம்மன் சந்நிதியில் இரவு 10 மணி முதல் 10.40 வரை முதல் கால பூஜையும், இரவு 11 மணி முதல் 11.40 மணி வரை இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் 12.40 வரை மூன்றாம் கால பூஜையும், அதிகாலை ஒரு மணி முதல் 1.40 வரை நான்காம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு அா்த்த ஜாம பூஜையும், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெறுகின்றன.  

சுவாமி சந்நிதியில் இரவு 11 மணி முதல் 11.45 வரை முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி முதல் 12.45 வரை இரண்டாம் கால பூஜையும், அதிகாலை ஒரு மணி முதல் 1.45 மணி வரை மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 2 மணி முதல் 2.45 மணி வரை நான்காம் கால பூஜையும், அதிகாலை 3.45 மணிக்கு அா்த்த ஜாம பூஜையும், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெறுகின்றன.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இரவு முழுவதும் நடைபெறும் அபிஷேகம், மகா சிவராத்திரி பூஜைகளில் அனைத்து பக்தா்களும் பங்கேற்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கோயிலில் மாநகரக் காவல் துறையினா் இரவு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க