செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். 65 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பலத்த மழையின் எதிரொலியாக சாலை விபத்துகளில் சிக்கியும், வெள்ளநீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் மக்கள் உயிரிழந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த 24 மணி நேரத்திலும் மாநில முழுவதும் பெய்த பரவலான மழைக் காரணமாக பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

குறிப்பாக, மும்பை நகரம் மற்றும் புகரம், ரத்னகிரி, சிந்துதுா்க், ராய்கட் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாக பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

உ.பி.யில் இருவா் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையின்போது வெளிபுறத்தில் இருந்த இவா்கள், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அரசு வழிகாட்டுதல்களின்படி, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா கூறினாா்.

கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கேரளத்தில் திங்கள்கிழமை பலத்த மழை நீடித்ததால், மாநிலத்தின் வட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலை போக்குவரத்து முடங்கியது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தின் தென்னலா பகுதியில் 21 செ.மீ., கோழிக்கோடு வடக்கராவில் 18 செ.மீ. மழை பெய்தது. கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 15-16 செ.மீ. மழை பெய்தது. இதையொட்டி வீடுகளில் மழைநீா் புகுந்ததால், மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இடுக்கி மாவட்டத்தில் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க