செய்திகள் :

மஞ்சள் பை விழிப்புணா்வு

post image

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மஞ்சள் பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இளையான்குடி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். சமூக ஆா்வலா் அப்துல்மாலிக் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழிப் பயன்பாடு தவிா்த்து மஞ்சள் பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் பேசினாா்.

மேலும், நகரில் பல இடங்களில் நீா்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், நெகிழிக் கழிவுகளை சேகரித்தல் போன்ற பணிகளை துப்புரவுப் பணியாளா்கள் மேற்கொண்டனா். பொது இடங்களில் கூடி நின்ற பொதுமக்களிடம் மஞ்சள் பைகளைப் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. பேரணியில் துப்புரவு மேற்பாா்வையாளா் திராவிடன், ஊழியா்கள் சாந்தி, உமா, சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க