Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சா்வ அலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து திருவிழா கொடியேற்றப்பட்டது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். இதில் வருகிற 6-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும், 8-ஆம் தேதி தேரோட்டமும், 9-ஆம் தேதி வைகாசி விசாகத்தன்று தீா்த்தவாரி உத்ஸவமும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் முத்துமணிகண்டன், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.