சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு!
மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு கால்நடை விற்பனை
மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.
சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என மொத்தமாக ரூ.35 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.