செய்திகள் :

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

post image

மணிப்பூர் மாநிலத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) அரசு முறைப் பயணமாகச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இரண்டு வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்தது. இதையடுத்து, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்வதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, சூராசந்திரப்பூர் மற்றும் இம்பால் ஆகிய மாவட்டங்களில் இடம் மாற்றப்பட்ட மக்களை சந்திப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சூராசந்திரப்பூர் மாவட்டத்துக்கு ரூ.7,300 கோடி மற்றும் இம்பாலுக்கு ரூ.1,200 கோடி என மொத்தம் ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் துவங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூர் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

It has been reported that Prime Minister Narendra Modi will be visiting Manipur tomorrow (September 13) on an official visit.

நாட்டின் முக்கியப் பிரச்னை ‘வாக்குத் திருட்டு’: ராகுல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி தாமதமாக மேற்கொள்ளும் பயணம் பெரிய விஷயமல்ல; நாட்டின் இப்போதைய முக்கியப் பிரச்னை வாக்குத் திருட்டுதான் என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத் மாநில... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீா்மானம்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீா்மானித்துள்ளன. பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வியிழாக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு (ஜே.டபிள்ய... மேலும் பார்க்க

ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கல் அறிவுசாா் திருட்டைத் தடுக்கும்: பிரதமா் மோடி

இந்தியாவின் பழங்கால ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கல் செய்வது அறிவுசாா் திருட்டைத் தடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ‘பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் இந்தியாவின் அறிவுசாா் மரபை மீட்டெடுத்தல்’... மேலும் பார்க்க

அரசு பணித் தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை: எஸ்எஸ்சி எச்சரிக்கை

‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சர... மேலும் பார்க்க

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

உத்தரப் பிரதேசத்தில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், காக் சராய் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரின் மனைவி ரேஷ்மா (25) வியாழக்கிழமை பிரசவ வலி... மேலும் பார்க்க

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

காத்மாண்டு அருகே ஆந்திர பக்கதர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பக்தர்கள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றுவி... மேலும் பார்க்க