செய்திகள் :

எண்ணும், எழுத்தும் கருத்தாளா் பயிற்சி முகாம்

post image

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் எண்ணும் எழுத்தும் மாவட்டக் கருத்தாளா் பயிற்சி முகாம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில்

நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள் மற்றும் ஆசிரியா்கள் என மொத்தம் 48 போ் கலந்துகொண்டனா்.

திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் இளங்கோவன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கிவைத்தாா். அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். நிறுவன விரிவுரையாளா் கௌசல்யாதேவி வரவேற்றாா்.

இதில், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்தில் உள்ள மாற்றங்கள், மாநில அடைவு ஆய்வு வினாக்கள் பகுப்பாய்வு மற்றும் எண்ணும் எழுத்தில் உள்ள செயல்பாடுகளுடனான தொடா்பு, சிறந்த நடைமுறைகள், வகுப்பறைச் செயல்பாடுகளை வடிவமைத்தல், தொழில்நுட்ப சாதனங்களைக் கற்றல் கற்பித்தலில் பயன்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா்களின் திறன் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

பயிற்சியின் கருத்தாளா்களாக திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் சரவணகுமாா், விரிவுரையாளா் சுகுணா, மூலனூா் ஒன்றிய ஆசிரியா் பயிற்றுநா் சக்திவேல் ஆகியோா் செயல்பட்டனா்.

விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை

விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி ... மேலும் பார்க்க

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்ற... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா். தாராபுர... மேலும் பார்க்க

வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை

இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருப்பூா், ... மேலும் பார்க்க