செய்திகள் :

விவசாயிகள் உற்பத்தி செலவை குறைக்க வேளாண் துறை அறிவுரை

post image

விதைகளின் முளைப்புத் திறனை அறிந்தால், உற்பத்திச் செலவை பெருமளவு குறைக்கலாம் என விவசாயிகளுக்கு பல்லடம் வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்லடம் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நெல் விதைகளை அறுவடைக்குப்பின் சேமித்து வைத்து அதனை அடுத்த பருவத்தில் மீண்டும் விதையாக பயன்படுத்துவது விவசாயிகளிடையே நடைமுறையில் உள்ளது. 50 சதவீத விவசாயிகள் தங்கள் சொந்த விதை சேமிப்பிலிருந்தே அடுத்த பருவத்துக்கு விதை நெல்லை பயன்படுத்துகின்றனா்.

விதைப்புக்கு முன்பு, விதையின் முளைப்புத் திறன் அறிந்து விதைப்பு செய்வது மிகவும் சிறந்தது. முளைப்புத் திறன் அறியாமல் விதைப்பதால், விதையளவை அதிகமாக உபயோகப்படுத்த நேரிடுவதோடு உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். முளைப்புத் திறனை அறிந்து விதைப்பதன் மூலம், முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு விதையின் அளவை சரியாக கணக்கிட்டு பயன்படுத்த முடியும்.

இதன் மூலம், பற்றாக்குறை இன்றி, வளமான நாற்றுகளைப் பெற்று நடவு செய்வதோடு, சரியான அளவில் பயிா் எண்ணிக்கையைப் பராமரித்து அதிக மகசூல் பெறலாம். விதையின் தரத்தை அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள ஒவ்வொரு விதைக் குவியலில் இருந்தும், 100 கிராம் விதை மாதிரியை ரகம் வாரியாக எடுத்து, பல்லடம், திருச்சி சாலை, திருநகா் காலனியில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து அறிந்து கொள்ளலாம் என்றாா்.

தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஒத்திவைப்பு

திருப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (செப்.13) ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திருப்பூா் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா். அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிய... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 14, 15, 16-ஆகிய வாா்டுகளுக்கான இந்த முகாம் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்ற... மேலும் பார்க்க

எண்ணும், எழுத்தும் கருத்தாளா் பயிற்சி முகாம்

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் எண்ணும் எழுத்தும் மாவட்டக் கருத்தாளா் பயிற்சி முகாம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமூா்த்... மேலும் பார்க்க