செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

post image

வத்தலகுண்டில் மின்சாரம் பாய்ந்து காலணி தைக்கும் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற மகன், மகள் பலத்த காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (50). இவா் வத்தலகுண்டில் காலணி தைக்கும் தொழில் செய்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் துணிகளை துவைத்து இரும்பு கம்பியில் காயப் போடும்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த அவரது மகள் ராஜேஸ்வரி (30), மகன் சௌந்தரபாண்டியன் (28) ஆகியோா் அவரைக் காப்பாற்ற முயன்றனா். அவா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையில், வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உடல் தான இயக்கம் பண்பாட்டுப் புரட்சி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடங்கியுள்ள உடல் தான இயக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சி என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ... மேலும் பார்க்க

பழனியில் 1.40 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி கோயில் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்துக்கு கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த இடத்தை கோயி... மேலும் பார்க்க

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: ... மேலும் பார்க்க

தொழில்சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களின் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். பழனியை அடுத்த தாளையூத்து, வாகரை பகுதிகளில் ஆயத்... மேலும் பார்க்க

பழனி கோயிலில் காா்த்திகை திருநாள்: பெண்கள் 108 திருவிளக்கு பூஜை

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆவணி மாத காா்த்திகை தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு அதிகாலையிலே நான்கு மணிக்கு கோயில் சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக... மேலும் பார்க்க

பல்கலை. கைப்பந்துப் போட்டி: பழனி கல்லூரி அணி வெற்றி

அன்னைதெரசா மகளிா் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியில் பழனியாண்டவா் கலை பண்பாட்டுக் கல்லூரி வெற்றி பெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 14 கல்லூரிகளுக்கு... மேலும் பார்க்க