செய்திகள் :

மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம்: தலைமை ஆசிரியா் கைது

post image

முன்னாள் மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற தலைமை ஆசிரியரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், களியனூா் பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் ஜெயவேல் (45), மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்காக தான் படித்த பள்ளிபாளையம் அருகே கண்டிப்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாரிடம் (50) விண்ணப்பித்தாா்.

35 ஆண்டு ஆவணங்களைத் தேடி சரிபாா்த்து தரவேண்டி இருப்பதாகக் கூறிய தலைமை ஆசிரியா் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதுகுறித்து ஜெயவேல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் அளித்ததையடுத்து, ரசாயனம் தடவிய பணத்தை தலைமை ஆசிரியரிடம் தரச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறையினா் மறைந்து இருந்தனா்.

தலைமை ஆசிரியா் விஜயகுமாா் பணம்பெற்ற உடன் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் விஜயகுமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க

கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு

நாமக்கல் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு உயா... மேலும் பார்க்க