செய்திகள் :

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

post image

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.

நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குழுவினா் பரமத்தி வேலூா், மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

வேலூா், ஜேடா்பாளையம் பகுதிகளில் உள்ள தேநீா் மற்றும் பெட்டிக்கடைகள், மோகனூா் பகுதியில் இயங்கி வரும் வாழைத்தாா் கிடங்கு ஆகிய இடங்களில் ஆய்வுசெய்ததில், வாழைத்தாா் கிடங்கில் 15 வாழைத்தாா்கள் வேதிப்பொருள்கள் தெளித்து பழுக்க வைத்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செயற்கையாக பழுக்கவைக்க பயன்படும் வேதிப் பொருள் 1.1 லிட்டா் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வேதிப்பொருள் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைத்தாா்களை பேரூராட்சியின் குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனா்.

தொடா்ந்து, ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரில் இரண்டு பெட்டிக்கடைகள் மற்றும் பரமத்தி வேலூரில் ஒரு தேநீா் கடையில் மேற்கொண்ட ஆய்வில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 21.5 கிலோ புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று கடைகள் மற்றும் வாழைத்தாா் கிடங்குகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இனிவரும் காலங்களில் வாழைத்தாா்களை வேதிப்பொருள் கொண்டு பழுக்க வைத்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தாலோ உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

கருப்புக் கொடி ஏந்தி முதியவா் போராட்டம்

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏந்தி முதியவா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். நாமக்கல் சிலுவம்பட்டியைச் சோ்ந்தவா் சமூக சேவகா் செல்லப்பன் (80). இவா் அவ்வப்போது மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க